முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த கோரிக்கை :

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த கோரிக்கை :
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில், தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்டத் தலைவர் ஹாஜா மைதீன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

மாநிலச் செயலாளர் ஆல்பா நசீர், மாவட்டச் செயலாளர் அஹமது சபியுல்லா ஆகியோர் பேசினர்.

மாவட்டப் பொருளாளர் இக்பால் வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார். கூட்டத்தில், சாதிவாரி கணக் கெடுப்பு எடுக்காமல் வன்னியர் களுக்கு 10.5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கியதுபோல, முஸ்லிம்களுக்கான இடஒதுக் கீட்டை 3.5 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். தமிழகத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்கள், பயன் படுத்துபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மது, புகையிலை, சிகரெட் ஆகியவற்றை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.

பொதுவெளியில் புகை பிடிப்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், மாவட்ட துணைச் செயலாளர் முஹம்மது ரியாஸ் நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in