அருப்புக்கோட்டை அருகே - ராணுவ வீரர்கள் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் :

அருப்புக்கோட்டை அருகே -  ராணுவ வீரர்கள் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் :
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள வாழ்வாங்கி ஊராட்சியில் முன்னாள் மற்றும் இந்நாள் ராணுவ வீரர்கள் பங்கேற்ற சுதந்திர தினவிழா நடைபெற்றது.

ராணுவ வீரர்கள், துணை ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ராணுவ வீரா்கள் இனைந்து விருதுநகா் மாவட்ட ஜவான்ஸ் நலச்சங்கத்தை உருவாக்கி செயல்பட்டு வருகின்றனர். இவா்கள் விடுமுறை நாட்களில் தூய்மை, பசுமை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சங்கத்தின் சார்பில் சுதந்திர தினவிழா, வாழ்வாங்கி ஊராட்சியில் உள்ள ரெங்கநாதன் ஆரம்பப் பள்ளியில் நடைபெற்றது.

இதில், ராணுவ வீரர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரக்கன்றுகளை நட்டனர். மேலும் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in