பெரம்பலூரில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் :

பெரம்பலூரில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்   :
Updated on
1 min read

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் பெரம்பலூர் நான்கு ரோடு அருகிலுள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்டத் தலைவர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.380 மின்வாரியமே நேரடியாக வழங்க வேண்டும். மின்வாரியத்தில் காலியாக உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட களப்பணி உதவியாளர் பணியிடங்களுக்கு ஒப்பந்த பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். 1989 முதல் பணியிலிருக்கும் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் ஆகியவை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in