காஞ்சிபுரத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வு :

காஞ்சிபுரத்தில்  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வு :
Updated on
1 min read

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள இரட்டை திருமாளிகையில் இருந்து கற்தூண்கள், திருவாச்சி ஆகியவை காணாமல் போய்விட்டதாக கோயில் பக்தர்கள் டில்லிபாபு, தினேஷ் ஆகியோர் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் மலர்விழி, உதவி ஆய்வாளர் குமார் ஆகியோர் நேற்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் வந்தனர். அவர்கள் இரட்டை திருமாளிகை கற்தூண்கள் தொடர்பாக ஆய்வு செய்தனர். திருவாச்சி தொடர்பான ஆவணங்கள் குறித்தும் கேட்டதாகத் தெரிகிறது. விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in