சலுகை விலையில் சாராயம் விற்பனை; பெண் உட்பட 2 பேர் கைது :

சலுகை விலையில் சாராயம் விற்பனை; பெண் உட்பட 2 பேர் கைது :
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் காவல்நிலையத் துக்கு உட்பட்ட வேப்பந்தட்டை சிவன் கோயில் பகுதியில் நேற்று முன்தினம் 2 பேர், சுதந்திர தினத்தை முன்னிட்டு 10 பாக்கெட் சாராயம் வாங்கினால் ஒரு பாக்கெட் இலவசம் என சிறப்பு சலுகையில் சாராயம் விற்றதாகக் கூறப்படுகிறது. இதைக் கேள்விப்பட்ட மதுப் பிரியர்கள் ஏராளமானோர் அங்கு சென்று, சாராயம் வாங்கிச் சென்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவின.

இதையறிந்த அரும்பாவூர் போலீஸார் நேற்று அப்பகுதிக்குச் சென்று, சாராய விற்பனையில் ஈடுபட்ட வேப்பந்தட்டை வட்டம் நெய்குப்பை பிரதான சாலையைச் சேர்ந்த மணி மனைவி சித்ரா(45), பிம்பலூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சுரேஷ்(39) ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in