டாஸ்மாக் மதுபானக் கடைகள் இன்று மூடல் :

டாஸ்மாக் மதுபானக் கடைகள் இன்று மூடல் :
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தும் இன்று மூடப்படும், என மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சுதந்திர தினத்தினை முன்னிட்டு மதுபானம் விற்பனை இல்லாத தினமாக கடைப்பிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி இன்று (15-ம் தேதி) சுதந்திர தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் ஏற்கெனவே கரோனா தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள மதுக்கூடங்கள் மற்றும் மதுக்கூடங்களுக்கான உரிமம் பெற்றுள்ள அரசு மற்றும் தனியார் ஓட்டல்கள் அனைத்தும் மூடப்படும். அரசின் இந்த உத்தரவை மீறி விற்பனையாளர்கள் மதுக்கடைகளை திறந்தாலும், விற்பனை செய்தாலும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in