தி.மலையில் குடிநீர் வழங்காத நகராட்சியை கண்டித்து - காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் : காவல்துறையினர் பேச்சுவார்த்தை

திருவண்ணாமலையில் குடிநீர் வழங்காத நகராட்சியை கண்டித்து, காலிக் குடங்களுடன் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலையில் குடிநீர் வழங்காத நகராட்சியை கண்டித்து, காலிக் குடங்களுடன் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

திருவண்ணாமலை நகராட்சியில் குடிநீர் வழங்காததைக் கண்டித்து, காலிக் குடங்களுடன் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை நகராட்சி சன்னதி தெரு உட்பட 4 தெருக்களில் கடந்த ஒரு சில நாட்களாக குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பொது மக்கள் முறையிட்டுள்ளனர். ஆனால், நடடிவக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை காலிக் குடங்களுடன் சன்னதி தெருவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தடையின்றி குடிநீர் வழங்க பொதுப்பணித் துறை அமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற நகர காவல் துறையினர், சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர்.

அப்போது அவர்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி ஆணையாளரிடம் எடுத்துரைத்து தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், தற்காலிகமாக லாரி மூலமாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றனர். இதையடுத்து, சுமார் 30 நிமிடம் நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in