தி.மலை அண்ணாமலையார் கோயிலில் - சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை :

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குருபூஜையையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மகா தீபாராதனை நேற்று நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குருபூஜையையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மகா தீபாராதனை நேற்று நடைபெற்றது.
Updated on
1 min read

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் சுந்தரமூர்த்தி நாயனாரின் குருபூஜை விழா நேற்று நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் உள்ள சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுந்தரமூர்த்தி நாயனார் உற்சவ மூர்த்தி, கோயில் உள்ள 5-வது பிரகாரத்தில் வலம் வந்தார். வேத மந்திரங்களை முழங்கி சிவாச்சாரியார்கள் பூஜை செய்தனர்.

கரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக, பக்தர்கள் இல்லாமல் குரு பூஜை விழா நடைபெற்று முடிந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in