வீட்டின் பூட்டை உடைத்து : 29 பவுன் நகை திருட்டு :

வீட்டின் பூட்டை உடைத்து : 29 பவுன் நகை திருட்டு :
Updated on
1 min read

கீழக்கரையில் வீட்டின் பூட்டை உடைத்து 29 பவுன் நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் பணம் திருடப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை லெட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் டிட்டோ (45). பத்திர எழுத்தரான இவர் தனது உறவினர் வீட்டு விசேஷத்துக்காக நேற்று முன்தினம் மாலை வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் அருகிலுள்ள ஊருக்குச் சென்றுள்ளார். அவர் நேற்று அதிகாலை வீட்டுக்குத் திரும்பி வந்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த 29 பவுன் நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கம் திருடுபோயிருந்தது. கீழக்கரை போலீஸார் விசா ரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in