குண்டர் சட்டத்தில் 2 பேர் சிறையில் அடைப்பு :

குண்டர் சட்டத்தில் 2 பேர்  சிறையில் அடைப்பு :
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரேநாளில் 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வி.தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் காளிராஜ் (22). அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இவரை கடந்த 23.07.2021 அன்று விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

வைகுண்டம் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா என்ற சுரேஷ் (31). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சிலரும் சேர்ந்து கடந்த 12.07.2021 அன்று நாசரேத் அருகேயுள்ள உள்ள தனியார் சோலார் நிறுவனத்தில் அத்துமீறி நுழைந்து சோலார் பேனல்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாின் பேரில் சுப்பையா என்ற சுரேஷை போலீஸார் கைது செய்தனர்.

இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் உத்தரவிட்டார். காளிராஜ், சுப்பையா என்ற சுரேஷ் ஆகிய இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in