ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் - சுதந்திர தின பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் காவலர்கள் : ரயில் நிலையங்களில் சோதனை அதிகரிப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடி ஏற்ற உள்ள வேலூர் கோட்டை கொத்தளத்தில் கொடிக்கம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் தூய்மைப்படுத்தி வெள்ளை அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.படம்:வி.எம்.மணிநாதன்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடி ஏற்ற உள்ள வேலூர் கோட்டை கொத்தளத்தில் கொடிக்கம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் தூய்மைப்படுத்தி வெள்ளை அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.படம்:வி.எம்.மணிநாதன்.
Updated on
1 min read

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சுமார் 2 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

தமிழகம் முழுவதும் சுதந்திரதினத்தை முன்னிட்டு சுமார் 1 லட்சம் காவலர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட உள்ளனர். அதன்படி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமை யில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 10 துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவலர்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். குறிப்பாக, பொதுமக்கள் அதிகம் கூடும் வேலூர் கோட்டை, வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் அசம்பா விதங்களை தடுக்க காவல் துறையினர் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் முக்கிய சாலைகளில் வாகன ரோந்துப் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.

மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை

அதேபோல், தமிழக -ஆந்திர எல்லையோர சோதனைச் சாவடிகளில் வாகனத் தணிக்கையை தீவிரப்படுத்தவும், நகரின் முக்கிய பகுதிகளில் இரவு நேரத்தில் வாகனத் தணிக்கையை அதிகரிக்கவுள்ளனர். காவல் துறையினரின் இந்த பாதுகாப்பு நடவடிக்கை வரும் 16-ம் தேதி வரை தொடரும் என்று காவல் துறை அதிகாரிகள் தரப்பில் தெரி விக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in