விழுப்புரத்தில் மத்திய அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் :

விழுப்புரத்தில் மத்திய அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

விழுப்புரம் ரயில் நிலையம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். கரோனாவை காரணம் காட்டி ரயில் பயணங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வந்த பயண கட்டண சலுகைகளை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்தும், இதனை வாபஸ் பெற்று மீண்டும் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப்பயண ரயில் பெட்டிகளை மீண்டும் இணைக்க வேண்டும், புதுச்சேரி, சண்டிகார் மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளின் வாகனங்களுக்கு சலுகை விலையில் பெட்ரோல் வழங்குவதுபோல் தமிழகத்திலும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட தலைவர் பி.முருகன், நிர்வாகிகள் டி.முருகன், சேகர், செல்வி, ராஜேந்திரன், குணசேகரன், ஞானவேல், கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in