ஈரோடு ரயில் நிலைய வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் :

ஈரோடு ரயில் நிலைய வளாகத்தில்  மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

ஈரோடு ரயில் நிலைய வளாகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு உதவித் தலைவர் ராஜூ தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் அம்மணி அம்மாள், மாவட்ட உதவித் தலைவர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கி வந்த ரயில் கட்டண சலுகைகளை பறிக்கக்கூடாது, ரயில் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது, ஈரோடு மாவட்டத்தில் முகாம் நடத்தி அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in