புதிதாக 125 பேருக்கு கரோனா தொற்று :

புதிதாக 125 பேருக்கு கரோனா தொற்று  :
Updated on
1 min read

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 45 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 308 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டத் தில் நேற்று 20 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. 22 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 216 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 12 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது. 19 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 48 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in