பழமை மாறாமல் புதுபொலிவு பெற்றது - அரண்மனை சிறுவயல் மருதுபாண்டியர் கோட்டை :

பழமை மாறாமல் புதுபொலிவு பெற்றது -  அரண்மனை சிறுவயல் மருதுபாண்டியர் கோட்டை :
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், கல் லல் அருகே அரண்மனை சிறுவயல் மருதுபாண்டியர் கோட்டை பழமை மாறாமல் புதுப்பொலிவு பெற்றது.

கல்லல் அருகே அரண் மனை சிறுவயலில் பழங் காலக் கோட்டை உள்ளது. இக் கோட் டை சிவகங்கையை ஆண்ட சசிவர்ணத்தேவர் வம் சத்தவரால் கட்டப்பட்டது.

கிபி 18-ம் நூற்றாண்டின் இறுதியில் மருது சகோ தரர்கள் படையுடன் இந்தக் கோட்டையில் தங்கி ஆங்கி லேயருடன் கடும் போர் புரிந் துள்ளனர்.

இங்கு படைவீரர்கள் தங்கும் வகையில் நான்கு நுழை வாயில்களுடன் 3 கொத்தள அறை கள் உள்ளன. இதனை மருது பாண்டியர் கோட்டை என்றே அழைக்கின்றனர்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கோட்டையை தொல்லியல்துறை பாது காத்து வருகிறது. சிதிலமடைந்த இந்தக் கோட்டை ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் ரூ.60.31 லட்சத்தில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. கட்டுமானப் பணியில் சிமென்ட் பயன்படுத் தாமல் சுண்ணாம்பு, மணல், கடுக் காய், கருப்பட்டி கலவையை பயன்படுத்தி உள்ளனர்.

இதற்காக கழுகு மலை யில் இருந்து சுண் ணாம்பு, கொள்ளிடம் காவிரி ஆற் றில் இருந்து மணல், ராஜ பாளையத்தில் இருந்து சித்துக்கல் வரவழைக்கப் பட்டுள் ளது.

தற்போது பணிகள் முடிந்து புதுப்பொலிவுடன் காணப் படுகிறது. மேலும் வளாகத்தில் பழமையான தெரு விளக்குகள் அமைக்கப் பட்டுள்ளன. இதனை வரலாற்று ஆர்வலர்கள் ஆர்வத் துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in