அருப்புக்கோட்டையில் இளைஞர் காங். ஆர்ப்பாட்டம் :

அருப்புக்கோட்டையில் இளைஞர் காங். ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

விளையாட்டுத் துறையில் சாதனை புரி வோருக்கு ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டு வந்தது. இனிமேல் இதன் பெயர் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது என அழைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அருப்புக்கோட்டை இந்தியன் வங்கி எதிரே ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது பெயரை மாற்றக்கூடாது என வலியுறுத்தியும், பெயர் மாற்றம் செய்த மத்திய அரசை கண்டித்தும் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். இதில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர் காங்கிரஸார் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in