புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் :

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் :
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள தவளைப்பள்ளத்தைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் மகள் ஜெனிஃபர் பிரியங்கா(21). இவரும், அதே ஊரைச் சேர்ந்த அற்புதசாமி மகன் ஆல்பர்ட்(40) என்பரும் 6 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர்.

இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, ஆல்பர்ட் மீது ஆலங்குடி மகளிர் காவல் நிலையத்தில் பிரியங்கா புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து, புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று புகார் மனு அளிக்க வந்த ஜெனிஃபர் பிரியங்கா, தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார். போலீஸார் அவரை சமாதானப் படுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in