திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் சிறப்பு புத்தகக் கண்காட்சி :

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில்  சிறப்பு புத்தகக் கண்காட்சி :
Updated on
1 min read

சுதந்திர தினத்தையொட்டி திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் சிறப்பு புத்தகக் கண்காட்சி ஆக.9-ம் தேதி தொடங்கியது. இந்த கண்காட்சி ஆக.15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

கண்காட்சியில் சுதந்திர போராட்ட வரலாறு, விடுதலை போராட்ட தியாகிகள் தொடர்பான நூல்கள் வாசகர்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கண்காட்சியை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு பயன்பெறலாம். ஆக.16-ம் தேதி முற்பகல் 11 மணிக்கு சுதந்திர தின விழா 75-ம் ஆண்டு கொண்டாட்டத்தில் ஒரு பகுதியாக மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் வீ.கோவிந்தசாமி தலைமையில் ‘எழுச்சி மிகு இந்தியாவில் நான்’ என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் வாசகர்கள், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும் பங்கேற்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in