தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் :

தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

அறந்தாங்கியில் உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூய்மைப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி தினக்கூலி ரூ.422 வீதம் வழங்க வேண்டும். அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். கரோனா ஊக்கத் தொகையாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, சிஐடியு நிர்வாகி கவி பாலா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் முகமதலி ஜின்னா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in