மண்ணெண்ணெயுடன் வந்த மாற்றுத்திறனாளி :

மண்ணெண்ணெயுடன் வந்த மாற்றுத்திறனாளி :
Updated on
1 min read

திருநெல்வேலி அருகே ஓமநல்லூர் வடக்கு தெருவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஆறுமுகம் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை போலீஸார் கைப்பற்றினர். அவரிடம் நடத்திய விசாரணை யில், தனக்கு 5 சகோதரர்கள் இருப்பதாகவும், தனக்குள்ள சொத்து பாகம் 57 சென்ட் இடத்தை அவர்கள் தரமறுப்பதாகவும், அதனால் மனமுடைந்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க வந்ததாகவும் தெரிவித்தார். போலீஸார் அவருக்கு ஆலோசனைகளை வழங்கி கோரிக்கை மனுவை அளிக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in