வாளுடன் ஆடிய இளைஞர் கைது :

வாளுடன் ஆடிய  இளைஞர் கைது :
Updated on
1 min read

வல்லநாடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாட்டுபோட்டு, கையில் வாளை வைத்துக்கொண்டு ஆடி, அதனைசெல்போனில் ஒளிப்பதிவு செய்து வாட்ஸ் அப்பில் பரப்பியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த எஸ்பி ஜெயக்குமார் அந்த இளைஞரை கண்டுபிடித்து கைது செய்ய தூத்துக்குடி ஊரக டிஎஸ்பி பொன்னரசுக்கு உத்தரவிட்டார். முறப்பநாடுஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தி அந்த இளைஞர் வசவப்பபுரம் பசும்பொன் நகரைச்சேர்ந்த தர்மதுரை (22) என கண்டுபிடித்தனர். அவர் நேற்றுமுன்தினம் வசவப்பபுரம் பசும்பொன் நகர் செல்லியம்மன் கோயில் அருகே பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாள் வைத்து பாட்டு போட்டு ஆடியதுடன், அதனை செல்போனில் ஒளிப்பதிவு செய்து வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளது தெரியவந்தது. அவரை கைது செய்து, அவரிடம் இருந்த வாளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in