பெண்ணிடம் நகை பறித்தவர் கைது :

பெண்ணிடம் நகை பறித்தவர் கைது :
Updated on
1 min read

காஞ்சிபுரம் மாவட்டம், பாலுச்செட்டி சத்திரத்தை அடுத்த கீழம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி மலர்(39). இவர், 2 நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ஏரிக்கரையில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது, மர்ம நபர் ஒருவர் மலரின் கழுத்து மற்றும் வாயை அழுத்திப் பிடித்துள்ளார். இதில், அவர் மயங்கினார்.பின்னர், அவரின் கழுத்திலிருந்த தாலி செயின் உட்பட 5 பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு, மர்ம நபர் தப்பிச் சென்றுள்ளார்.

இதுதொடர்பான புகாரின் பேரில் பாலுச்செட்டி சத்திரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு முசரவாக்கத்தைச் சேர்ந்த சீராளன்(39) என்பவரை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in