புவனகிரியில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 பேர் கைது :

புவனகிரியில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 பேர் கைது :
Updated on
1 min read

புவனகிரியில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

புவனகிரி போலீஸ் இன்ஸ் பெக்டர் (பொறுப்பு) குணபாலன், சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீஸார் நேற்று புவனகிரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புவனகிரி அருகே உள்ள பெருமாத்தூர் சுடுகாடு அருகே 5 பேர் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தனர். போலீஸார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.அதில், அவர்கள் கிள்ளை தளபதி நகரைச் சேர்ந்த லட்சுமணன் (23), கீழமணக்குடி வெங்கடேசன் (44), கீரப்பாளையம் விக்னேஷ் (26), புவனகிரி மாரிமுத்து (24), முட்லூர் மூர்த்தி (21) என்று தெரியவந்தது.

இவர்கள் 5 பேரும் சேர்ந்து புவனகிரி பகுதியில் கூட்டுக் கொள்ளையடிக்க திட்டம் போட் டதும் தெரியவந்தது. இத னையடுத்து போலீஸார் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புவனகிரி அருகே உள்ள பெருமாத்தூர் சுடுகாடு அருகே 5 பேர் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in