தமிழக அரசுப் பணியிடங்களை தமிழர்களுக்கே வழங்க வலியுறுத்தல் :

தமிழக அரசுப் பணியிடங்களை தமிழர்களுக்கே வழங்க வலியுறுத்தல் :
Updated on
1 min read

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டக் குழுக் கூட்டம், திருவாரூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் துரை.அருள்ராஜன் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் வை.சிவபுண்ணியம் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள மத்திய அரசுப் பணியிடங்களில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். கடந்த 2014-ம் ஆண்டு, தமிழக அரசு அறிவித்த டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெளி மாநிலத்தவரும் பங்கேற்கலாம் என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசுப் பணியிடங்கள் அனைத்தும் தமிழக இளைஞர்களுக்கே என சட்டம் நிறைவேற்ற வேண்டும்.

தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களில் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in