சிறுமிக்கு பாலியல் தொல்லை; இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை :

சிறுமிக்கு பாலியல் தொல்லை; இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை :
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல் லூர் சேகரை கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய்(22). இவர், கடந்த 2019-ம் ஆண்டு மே 27-ம் தேதி 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், திருவாரூர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விஜய்யை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை திருவாரூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி சுந்தரராஜன் நேற்று முன்தினம் அளித்த தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட விஜய்க்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in