செஞ்சி அருகே சாலையோர - மரத்தில் கார் மோதி கல்லூரி பேராசிரியர் உயிரிழப்பு :

செஞ்சி அருகே சாலையோர  -  மரத்தில்  கார் மோதி கல்லூரி பேராசிரியர் உயிரிழப்பு :
Updated on
1 min read

செஞ்சி அருகே சாலையோர மரத்தில் கார் மோதியதில் கல்லூரி பேராசிரியர் உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்தவர் ராஜா (39). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் சேத்பட்டை சேர்ந்த ஸ்டாலின் (39) என்பவருடன் நேற்று முன்தினம் நள்ளிரவு செஞ்சி வழியாக சேத்பட் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். வளத்தி அருகே உள்ள வடவெட்டி அருகே சென்ற கார் ஓட்டுநர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் காரின் பின்புறம் அமர்ந்திருந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டுநர் ஸ்டாலின் பலத்த காயம் அடைந்தார். இத்தகவலறிந்த வளத்தி போலீஸார் விபத்தில் பலத்த காயமடைந்த ஸ்டாலினை மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உயிரிழந்த ராஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்விபத்து குறித்து வளத்தி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in