

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அண்ணா சாலை பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (73). இவர் தனியார் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பிரேமா (68). இவர்கள் இருவரும் சேலம் டவுன் இரண்டாவது அக்ரஹாரத்தில் உள்ள அவரது நண்பர் வீட்டில் நடந்த விஷேசத்துக்கு பேருந்தில் சேலம் வந்தனர்.
சேலம் சீலநாயக்கன்பட்டியில் இருந்து நகரப் பேருந்தில் பழைய பேருந்து நிலையம் வந்தனர். பின்னர் அங்கிருந்து பட்டைக்கோயிலுக்கு ஷேர் ஆட்டோவில் வந்தனர்.இறங்கும் முன்னர் தாங்கள் கொண்டு வந்த பையை பார்த்தபோது,அதில் இருந்த ஒரு பவுன் வைரம் பதித்த மோதிரம், 4 பவுன்வளையல், 5 பவுன் செயின், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள அலைபேசி, ரூ.2,500ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. ஆட்டோவில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுதொடர்பாக சேலம் டவுன் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். புகாரில், 'சீலநாயக்கன் பட்டியில் இருந்து நகரப்பேருந்தில் வந்த போது தாங்கள் வைத்திருந்த நகையை காண வில்லை. எனத் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து நகை திருடியவரை தேடி வருகின்றனர்.