அரியலூரில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

அரியலூரில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேருந்து நிலையம் அருகே தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவர் பூ.விசுவநாதன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ள நிதிநிலை அறிக்கையில், செந்துறையில் முந்திரிக்கொட்டை தொழிற்சாலை, முந்திரி பழச்சாறு தொழிற்சாலை அமைக்க நிதி ஒதுக்க வேண்டும். நிலக்கடலை அதிகம் விளையும் ஜெயங்கொண்டம், தா.பழூர் ஒன்றியங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயனடையும் வகையில், சுத்தமல்லியில் நிலக்கடலை கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in