கடல் மீன்வள மசோதாவை கண்டித்து - மீனவர்கள் சங்கு ஊதி போராட்டம் :

ராமநாதபுரம் அருகே கிருஷ்ணாபுரம் கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்.
ராமநாதபுரம் அருகே கிருஷ்ணாபுரம் கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்.
Updated on
1 min read

இந்திய கடல் மீன்வள சட்ட மசோதாவை கண்டித்து ராமநாதபுரம் அருகே மீனவர்கள் சங்கு ஊதி கடற்கரையில் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கடற்கரை பகுதியில் இந்திய கடல் மீன்வள சட்ட மசோதா 2021-ஐ நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முயல்வதை கைவிடக்கோரி, ராமநாதபுரம் மாவட்ட சிஐடியு கடல் தொழிலாளர் சங்கம் மற்றும் நாட்டுப்படகு , சிறுதொழில் மீனவ கிராம மக்கள் சார்பில், கடற்கரையில் சங்கு ஊதியும், கருப்புக்கொடி ஏந்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாவட்ட சிஐடியூ செயலாளர் எம். சிவாஜி, கடல் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.கருணாமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in