கர்நாடக முதல்வரை கண்டித்து ஆர்ப்பாட்டம் :

கர்நாடக முதல்வரை கண்டித்து ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

காவேரி ஆற்றின் குறுக்கே மேகே தாட்டுவில் அணை கட்டியே தீருவேன் எனக்கூறிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை யைக் கண்டித்து தேவேந்திர குல வேளாளர் பேரமைப்பு சார்பில் ஜீயபுரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ரங்கம் தொகுதிச் செயலா ளர் புலிவலம் எம்.பாவேந்தர் தலைமை வகித்தார். தலைவர் ம.அய்யப்பன், பொதுச் செய லாளர் கோ.சங்கர் முன்னிலை வகித் தனர். சிறப்பு அழைப்பாளர் களாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலை வர் பி.அய்யாக்கண்ணு, திமுக மத்திய மாவட்ட துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சிவ சூரியன், நாம் தமிழர்கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரா.பிரபு, பாமக நிர்வாகிகள் திலகவதிபாமா, வடிவேல், ம.பிரின்ஸ், திலீப்குமார், சரவணன் உட்பட பலர் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in