ஆன்லைனில் விநாடி-வினா போட்டி :

ஆன்லைனில் விநாடி-வினா போட்டி :
Updated on
1 min read

தி.மலை மாவட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு கரோனா விழிப்புணர்வு குறித்த ‘ஆன்லைன்’ விநாடி-வினா போட்டி நாளை (6-ம் தேதி) நடைபெறவுள்ளது.

தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் நடைபெறும் போட்டியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையும், 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு நடத்தப்படும்.

ஆன்லைன் விநாடி-வினா போட்டி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதில், ஏதேனும் ஒரு அரை மணி நேரத்தை மாணவர்கள் தேர்வு செய்து போட்டியில் பங்கேற்கலாம். இதற்காக https://tiruvannamalai.nic.in என்ற இணையதளத்தில் corona awareness online quiz என்ற இணைப்பில் சென்று பதிவு செய்துகொண்டு பங்கேற்கலாம். மாணவர்களுக்கான உதவி ஆவணங்கள் இணைய தளத்தில் கிடைக்கும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in