போராட்டத்துக்கு ஆதரவாக - திருப்பூரில் இருந்து விவசாயிகள் பயணம் :

போராட்டத்துக்கு ஆதரவாக  -  திருப்பூரில் இருந்து விவசாயிகள் பயணம் :
Updated on
1 min read

மத்திய அரசின் மூன்று வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, கடந்த 8 மாதங்களாக டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நாளை (ஆக.5) முதல் வரும் 11-ம் தேதி வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்கிறார்கள்.

அதன் ஒரு பகுதியாக, திருப்பூர், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பிரதிநிதிகள் டெல்லிசெல்ல முடிவு செய்தனர். அதன்படி, திருப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர்எஸ்.ஆர்.மதுசூதனன், திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர்.குமார், கோவை மாவட்ட குழு உறுப்பினர் ரவி ஆகியோர் தலைமை யில் பலர் நேற்று காலைபுறப்பட்டுச் சென்றனர். இவர்களை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.மூர்த்தி, ஊத்துக்குளி வட்ட செயலாளர் கே.ஏ.சிவசாமி உட்பட பலர் வாழ்த்தி அனுப்பினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in