

திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாநகரில் மக்கள் அதிகம் கூடும் 27 இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு முகக்கவசம் அணியாமல் வருபவர்கள், அரசு உத்தரவை மீறி நடந்து கொள்பவர்களைத் தடுக்க சிறப்பு சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு சார்பில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. அதன்படி, முகக்கவசம் அணியாமல் வந்த 911 வாகன ஓட்டிகள், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 81 பேர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
படித்துறைகள் மூடல்