கார் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு :

கார் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு :
Updated on
1 min read

வந்தவாசி அருகே கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழந்தார்.

தி.மலை மாவட்டம் வந்த வாசி அடுத்த சத்தியவாடி கிராமத்தில் வசித்தவர் ராஜ்கபூர் மகன் கிருஷ்ணராஜ்(20). இவர், தனது நண்பர்களான செம்பூர் கிராமத்தில் வசிக்கும் விஷ்ணு(21), நாவல்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் செல்வ ராஜ்(23) ஆகியோருடன், சோகத்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண் டிருந்தார். இரு சக்கர வாகனத்தை கிருஷ்ணராஜ் ஓட்டியுள்ளார்.

வந்தவாசி - தெய்யார் சாலையில் சோகத்தூர் அருகே சென்றபோது, இரு சக்கர வாகனம் மீது எதிரே வந்த கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு கிருஷ்ணராஜை பரிசோதனை செய்த மருத் துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரி வித்தனர். மேலும், விஷ்ணு மற்றும் செல்வராஜ் ஆகியோர் செங்கல் பட்டு அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து ராஜ்கபூர் தெள்ளார் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in