5 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது :

5 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது :
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் வைப்பூர் கிராமத்தில் விவசாயி கொல்லப்பட்டதில் தொடர்புடைய அதே ஊரைச் சேர்ந்த அருண்மோகன்(27), ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த பிள்ளையார் குளம் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ்செல்வன்(37), தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த ஆண்டிமடம் சிவகுமார்(62) மற்றும் சூணாபுரி கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை (57), வஞ்சினபுரம் கிராமத்தில் விவசாயி கொலையில் தொடர்புடைய அருண்குமார்(27) ஆகியோரை மாவட்ட எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை செய்ததன்பேரில், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி நேற்று உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in