தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் - முதன்மை பொது மேலாளர் உட்பட 2 பேர் பணியிடை நீக்கம் :

பாலசுப்பிரமணியம்
பாலசுப்பிரமணியம்
Updated on
1 min read

நிலக்கரி கொள்முதலில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி ஓய்வுபெறும் நாளில் டிஎன்பிஎல் முதன்மை பொதுமேலாளர் உட்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டம் புகழூரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் (டிஎன்பிஎல்)கொள்முதல் பிரிவு முதன்மைபொதுமேலாளராக பணியாற்றியவர் பாலசுப்பிரமணியம்(60). இவர் நேற்று (ஜூலை 31) பணி ஓய்வு பெறவிருந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அனுமதி பெறாமல் வெளியூர் செல்லவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், தரக்கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு அலுவலர் பாலகிருஷ்ணனும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காகித நிறுவனத்துக்கு வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதால் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in