ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தில் - அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1.70 கோடியில் நல உதவி :

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அமைப்பு சாரா தொழிலாளிக்கு வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நலத்திட்ட உதவி வழங்கினார்.
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அமைப்பு சாரா தொழிலாளிக்கு வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நலத்திட்ட உதவி வழங்கினார்.
Updated on
1 min read

ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில், 18 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள 4418 தொழிலாளர்களுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

நிகழ்ச்சியில் அந்தியூர் எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், ஈரோடு தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் காயத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக ஆயிரம் நபர்களுக்கு தனியார் நிறுவன சமூக பாதுகாப்பு நிதியில் இருந்து இலவசமாக கரோனா தடுப்பூசி போடும் முகாமை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.

நாமக்கல்லில் உதவி

நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.க்கள் பெ.ராமலிங்கம், கு.பொன்னுசாமி மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in