கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் :

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் :
Updated on
1 min read

காரைக்குடி காந்திபுரம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (60). இவர், குடும்பச் சொத்து தொடர்பான பிரச்சினையில் தனது அண்ணன் மகன் சரவணனிடம் சமரசம் பேசியுள்ளார்.

இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் சரவணன் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்.17-ம் தேதி ஆறுமுகத்தை கம்பால் தாக்கி கொலை செய்தார்.

காரைக்குடி வடக்கு போலீஸார் வழக்கு பதிந்து சரவணனை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. சரவணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சுமதிசாய்பிரியா தீர்ப்பளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in