குருபரப்பள்ளி அருகே மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் நகை பறிப்பு :

குருபரப்பள்ளி அருகே மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் நகை பறிப்பு :
Updated on
1 min read

குருபரப்பள்ளி அருகே மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் நகை பறித்து சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அடுத்த சமந்தமலை பகுதியைச் சேர்ந்தவர் பட்டு (45). இவர் கடந்த 29-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு வெளியே சென்றிருந்தார். அப்போது, முகத்தில் மாஸ்க் அணிந்து வந்த 2 பேர், பட்டுவின் கண்ணில் மிளகாய் பொடி தூவி, கத்தியால் தாக்கினர். மேலும், காதில் அணிந்திருந்த ஒரு பவுன் நகை மற்றும் கொலுசு உள்ளிட்டவை பறித்துக் கொண்டு தப்பியோடினர். காயமடைந்த பட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் கொடுத்த புகாரின் பேரில் குருபரப்பள்ளி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in