‘திருப்பூருக்கு புதிதாக 22 ஆயிரத்து 500 தடுப்பூசிகள் வருகை' :

‘திருப்பூருக்கு புதிதாக 22 ஆயிரத்து 500  தடுப்பூசிகள் வருகை' :
Updated on
1 min read

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து திருப்பூர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும்நிலையில், புதிதாக 22 ஆயிரத்து 500 தடுப்பூசிகள் வந்துள்ளன.

இதுதொடர்பாக மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, "பல்வேறு மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், சென்னையில் இருந்து சுகாதாரத் துறைமூலமாக திருப்பூருக்கு 16,500எண்ணிக்கையிலான கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளன. அதேபோல, 6 ஆயிரம் கோவாக்‌ஷின்தடுப்பூசிகளும் வந்துள்ளன. அரசுமருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என பல்வேறு பகுதிகளுக்கு தேவைக்கேற்ப பிரித்து அனுப்பப்படும். தட்டுப்பாடின்றி கரோனா தடுப்பூசி அனைவருக்கும் வழங்கப்படும்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in