கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் :

கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் கரும்பு உற்பத்தியாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலையின் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் தலைவர் பி.ராமசாமி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ஆர்.திருப்பதி, செயலாளர் பி.கோவிந்தராஜ், பொருளாளர் அர்ச்சுணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், 2020-21 அரைவை பருவத்துக்கு வெட்டி அனுப்பிய கரும்புக்கான நிலுவைத் தொகை ரூ.18 கோடியை உடன் வழங்க வேண்டும்.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, கரும்பு விலை டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் விலையை நடப்பு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்க வேண்டும்.

மேகேதாட்டுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்பன உள்ளிட்ட தீர்மானங்களை வலியுறுத்தி கையில் கரும்புகளுடன் முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில், துணைத் தலைவர் கலியபெருமாள், துணை பொருளாளர்கள் அண்ணாதுரை, ராஜ்குமார் உள்ளிட்ட கரும்பு விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in