நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிடம் லஞ்சம்: ஊழியர் கைது :

நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிடம் லஞ்சம்: ஊழியர் கைது :
Updated on
1 min read

பண்ருட்டி அருகே வீரப்பார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (47). விவசாயியான இவர் நேற்று 600 நெல் மூட்டைகளை திருநாவலூர் நெல் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனைக்கு கொண்டு சென்றார். அப்போது அங்கு இளநிலை உதவியாளராக பணியிலிருந்த திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே பருத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் (47) என்பவர் மூட்டை ஒன்றுக்கு ரூ.50 வீதம் 30 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதனை கொடுக்க விரும்பாத ஏழுமலை விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார் அளித்தார். இதையடுத்து போலீஸாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஏழுமலை குணசேகரனிடம் அளித்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் குணசேக ரனை கைது செய்தனர். குணசேகரன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in