கெலவரப்பள்ளி அணையில் இருந்து பாசனத்துக்கு நாளை தண்ணீர் திறப்பு :

கெலவரப்பள்ளி அணையில் இருந்து பாசனத்துக்கு நாளை தண்ணீர் திறப்பு :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணையில் இருந்து முதல் போக பாசனத்துக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் கெலவரப்பள்ளி அணையில் இருந்து நாளை (29-ம் தேதி) முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை 135 நாட்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

கெலவரப்பள்ளி அணையில் இடது புற கால்வாய் மூலம் 5,918 ஏக்கரும், வலதுபுற கால்வாயில் 2082 ஏக்கர் நிலம் என மொத்தம் 8 ஆயிரம் ஏக்கர் புன்செய் நிலங்கள் பயன் பெறுகின்றன. இதன் மூலம் ஓசூர் வட்டத்தில் தட்டகானப்பள்ளி, பூதிநத்தம், பெத்தமுத்தாளி, முத்தாளி, வட்டுர், கதிரேப்பள்ளி, மாரசந்திரம், கொத்தூர், மோரனப்பள்ளி, தொரப்பள்ளி உள்ளிட்ட 22 கிராமங்கள் பயன்பெறுவதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in