கணவனை கொலை செய்த மனைவி கைது :

கணவனை  கொலை செய்த மனைவி கைது :
Updated on
1 min read

காஞ்சிபுரம் அருகே கணவனை அடித்துக் கொலை செய்த மனைவியை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

காஞ்சிபுரம் அருகே உள்ள கீழ்கதிர்பூர் கிராமம், புதுத் தெருவைச் சேர்ந்தவர் கங்காதரன்(35). இவரது மனைவி அர்ச்சனா(32). கங்காதரன் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கும், அவரது மனைவி அர்ச்சனாவுக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அர்ச்சனா கங்காதரனை தடியால் அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், கங்காதரன் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதைத் தொடர்ந்து அர்ச்சனாவை பாலுசெட்டிசத்திரம் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in