கடல் சீற்றத்தால் மீன்பிடி பணி பாதிப்பு :

கடல் சீற்றத்தால் மீன்பிடி பணி பாதிப்பு :
Updated on
1 min read

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையால் கடல் சீற்றம் நிலவியது. கடந்த இரு நாட்களாக ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை கடல் சீற்றம் நிலவியதால், கரையோர பகுதிகளில் மட்டும் நாட்டுப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர். நேற்று காலையில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. கன்னியாகுமரி, சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், மணகுடி, ராஜாக்கமங்கலம், குளச்சல், தேங்காய்பட்டணம் பகுதியில் மீன்பிடி பணிகள் பாதிக்கப்பட்டன. கடல் சீற்றம் குறைந்தால் இன்று மீன்பிடி பணியில் ஈடுபட மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in