4 விஏஓ குடும்பங்களுக்கு ரூ.3.50 லட்சம் நிதியுதவி :

தி.மலையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில், 4 விஏஓ குடும்பங் களுக்கு ரூ.3.50 லட்சம் நிதியுதவியை வழங்கிய மாநில செயலாளர் சுரேஷ்.
தி.மலையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில், 4 விஏஓ குடும்பங் களுக்கு ரூ.3.50 லட்சம் நிதியுதவியை வழங்கிய மாநில செயலாளர் சுரேஷ்.
Updated on
1 min read

மாவட்டத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் ஜெயசந்திரன், மாவட்ட துணைத் தலைவர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ஏழுமலை வரவேற்றார். உயிரிழந்த நாகராஜன், சீனுவாசன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் மற்றும் விபத்தில் காயமடைந்த தேவதாஸ் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.3.50 லட்சம் நிதியுதவியை மாநில செயலாளர் சுரேஷ் வழங்கினார். இதில், மாவட்ட அமைப்பு செயலாளர் மகாலிங்கம், மாவட்ட இணை செயலாளர்கள் சீனிவாசன், பிரவீண்குமார், மேகநாதன், போராட்டக்குழு தலைவர் ரகுராமன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in