கரோனா விதி மீறிய இறைச்சி கடைக்கு - ரூ.5,000 அபராதம் விதிப்பு :

கரோனா விதி மீறிய இறைச்சி கடைக்கு -  ரூ.5,000 அபராதம் விதிப்பு :
Updated on
1 min read

வேலூரில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத இறைச்சிக்கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.5,000 அபராதம் விதித்தனர்.

தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இம்மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,வாரச்சந்தை, காய்கறி மார்க்கெட், இறைச்சிக் கூடங்கள், உழவர்சந்தை போன்ற இடங்களில் அளவுக்கு அதிக மான கூட்டம் சேருவதால் மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும், அறிவுரைகளை ஏற்காத மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் பொது இடங்களில், கூட்டமாக கூடி வருவதை காண முடிகிறது.

வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு குறைவாக இருந்தாலும் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகா தாரத்துறையினர் எச்சரித்தனர். இதைத் தடுக்க அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம் விதிக்கவும், தேவையான ஆலோசனைகளை மாநகராட்சி அதிகாரிகள் வழங்க வேண்டும் என ஆணையர் சங்கரன் உத்தரவிட்டார்.

அதன்பேரில், மாநகராட்சி 2-வது மண்டல உதவி ஆணை யாளர் மதிவாணன் தலைமையில், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் வேலூர், சத்துவாச்சாரி, வள்ள லார், அலமேலுரங்காபுரம், டபுள் ரோடு, ஆர்டிஓ சாலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஆய்வு நடத்தினர். அப்போது, சமூக இடை வெளியை பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமல் வந்த 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.

அதேபோல, சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோயில் அருகே உள்ள ஒரு இறைச்சிக்கடையில் சமூக இடைவெளியை பின்பற்றா மல் மக்கள் கூட்டத்தை கூட்டி இறைச்சி விற்பனை செய்து வந்த கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in