

அரிமளம் அருகே லாரி மோதி 13 ஆடுகள் உயிரிழந்தன.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்தவர் மதி. இவர், மேய்ச்சலுக்காக புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே ராயவரத்துக்கு செம்மறி ஆடுகளை நேற்று முன்தினம் இரவு ஓட்டி சென்றுள்ளார்.
அரிமளம் பகுதியில் சென்றபோது, அவ்வழியே வந்த லாரி மோதியதில் 13 ஆடுகள் உயிரிழந்தன. இது குறித்து அரிமளம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.