‘தூய்மை பணியில் பங்கேற்கலாம்’ :

‘தூய்மை பணியில் பங்கேற்கலாம்’ :
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்டத்தை தூய்மையாக்கும் நிகழ்ச்சியில் ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்க லாம் என ஆட்சியர் அமர் குஷ்வா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருப்பத்தூர் மாவட்டத்தை தூய்மையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆங்காங்கே சேரும் குப்பைக்கழிவுகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை தூய்மைப்படுத் தும் நிகழ்ச்சி இன்று (23-ம் தேதி) காலை 10 மணிக்கு தொடங்கி வரும் 25-ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) வரை 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள திருப்பத்தூர் நகர பகுதியைச் சேர்ந்தவர்கள் நகராட்சி அலுவலகத்திலும், ஊரக பகுதியைச் சேர்ந்தவர்கள் பிடிஓ அலுவலகத்திலும், பேரூராட்சி பகுதியைச் சேர்ந்தவர் பேரூராட்சி அலுவலகத்திலும் சம்பந்தப்பட்ட பொறுப்பு அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in