அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் - விடுபட்ட குட்டைகளையும் இணைத்து : அரசாணை வெளியிட கோரிக்கை :

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் -  விடுபட்ட குட்டைகளையும் இணைத்து   : அரசாணை வெளியிட கோரிக்கை :
Updated on
1 min read

அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக் குழு கூட்டமைப்பு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குஅனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய மூன்று மாவட்ட மக்களின்நீண்ட கால கோரிக்கையானஅத்திக்கடவு- அவிநாசி திட்டத்துக்காக, அரசின் பேராதரவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பெருந்துறை முதல் அன்னூர் வரை, அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் பல குட்டைகள் விடுபட்டுள்ளன. விடுபட்ட குட்டைகளுக்கு உண்டான ஆய்வும்பொதுப்பணித்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுவிட்டது.

ஆகவே, விடுபட்ட குட்டைகளையும், அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் இணைத்து, தண்ணீர் கிடைக்க போர்க்கால அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டால், இந்த ஆண்டே எங்கள் பகுதி குளம், குட்டைகளுக்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in